(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, December 9, 2015

ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் உள்ள ஐந்திணை மரபணுப் பூங்காவில் டிசம்பர் 25 முதல் 27 ஆம் தேதி வரை தோட்டக்கலைக் கண்காட்சி!!

No comments :
ராமநாதபுரம் அருகேயுள்ள ஐந்திணை மரபணுப் பூங்காவில் இம்மாதம் 25 முதல் 27 ஆம் தேதி வரை தோட்டக்கலைக் கண்காட்சி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியது:

ராமநாதபுரம மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அச்சடிப்பிரம்பு கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஐந்திணை மரபணுப் பூங்கா கடந்த ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. 10 ஏக்கர் பரப்பளவிலான இப்பூங்காவிற்கு பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவ, மாணவிகளை அதிகம் ஈர்க்கும் வகையில் வரும் 25, 26 மற்றும் 27 ஆகிய 3 நாள்கள் தோட்டக்கலைக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. 

இக்கண்காட்சியில் பல வகையான ரோஜா மலர்கள், கார்னேஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், லில்லி, ஆர்கிட்ஸ், கிளாடியோலஸ், ஆல்ஸ்ட்ரோமீரியா மற்றும் டெய்சி போன்ற மலர்களாலான உருவகங்களும், மலர் அலங்காரங்களும் மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளது. 

பல்வேறு காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட காய்கறி சிற்பங்களும், இயற்கை காட்சிகளும் உருவாக்கப்பட்டு சிறப்பான முறையில் அமைத்திட தோட்டக்கலைத்துறையின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இக்கண்காட்சியை ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்க வேண்டும் என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment