(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 22, 2015

எமனேஸ்வரம் தரைபாலம் இருள் நீங்குமா?!!

No comments :
பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் தரைப் பாலத்தில் இரவு நேரங்களில் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் பாலத்தில் அங்காங்கே பள்ளங்கள் காணப்படுவதால் மழைநீர் தேங்கியும் காணப்படுகிறது.


பரமக்குடியிலிருந்து தரைப்பாலம் வழியே எமனேஸ்வரம் வருகின்ற மக்கள் இருள் சூழ்ந்த மற்றும் பள்ளங்களில் மழைநீரிலும் நடைபோட வேண்டி இருப்பதால் பாதசாரிகள் மிகுந்த அவதியடைகின்றனர்.






ஆகவே பரமக்குடி நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தயவுகூர்ந்து எமனேஸ்வரம் தரைப்பாலத்தில் விளக்கு வசதியும், குண்டு-குழியுமான பள்ளத்தை சரி செய்து மக்களது அவதியை தீர்த்திட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

செய்தி: அ.சேக் அப்துல்லா,இராமநாதபுரம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment