(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 23, 2017

பரமக்குடியில் புதிதாக போடப்பட்ட தார்சாலையில் பள்ளம்!!

No comments :
பரமக்குடியில் புதிதாக போடப்பட்ட தார்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 36ஆவது வார்டு திருவள்ளுவர் நகர் தெற்கு பள்ளிவாசல் செல்லும் சாலையில் கடந்த ஜனவரி மாதம் புதிதாக தார்சாலை போடப்பட்டது. அப்போது சாலையின் இருபுறமும் உள்ள வாருகால் மற்றும் கழிவுநீரை கடத்துவதற்கான கல்வெட்டையும் சீரமைக்க வில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில் அவ்வழியாக கட்டுமான பொருள்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனங்களால் சாலை முற்றிலும் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். 

ஆகவே, இச்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment