(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 6, 2017

கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் கல்லுாரி பட்டமளிப்பு விழா!!

No comments :
கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி பட்டமளிப்பு விழா நடந்தது. 

சென்னை சீதக்காதி டிரஸ்ட் செயலாளர் காலித் ஏ.கே.புகாரி தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் சுமையா வரவேற்றார். 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணை வேந்தர் கிருஷ்ணன் பாஸ்கர் மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:

இந்தியர்கள் சாதி, மத, மொழி ரீதியாக வேறுபடாமல் ஒன்றுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். பொது அறிவுதான் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையானது, உயர்கல்வி பெறுவதன் மூலம் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டும்.

பட்டம் பெற்று பல்வேறு வேலை வாய்ப்புகளை பெற்று, தான் படித்த கல்லுாரிக்கு பெருமை சேர்க்க வேண்டும். பெண் கல்வியால் சமுதாயத்தில் மாபெரும் புரட்சியும், வளர்ச்சியும் ஏற்படும். கற்ற கல்வியால் பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும், என்றார். 

தாளாளர் டாக்டர் ரகுமத்துநிஷா, துணைப்பொதுமேலாளர் சேக் தாவூத்கான் உட்படபலர் பங்கேற்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment