(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 31, 2017

திறந்தவெளி பாராக மாறி வரும் பேருந்து நிலையம்!!

No comments :
ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டை இரவு நேரங்களில் குடிமகன்கள் திறந்தவெளி பாராக மாற்றி வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

குடிமகன்கள் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை இரவு நேரங்களில் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குடித்து விட்டு பஸ் ஸ்டாண்டின் பிளாட்பாரங்களிலேயே படுத்து விடுகின்றனர்.


போதை அளவுக்கு அதிகமாகி இரவு நேரங்களில் குடிபோதையில் பஸ் ஸ்டாண்டு ரோட்டில் பிரச்னை செய்கின்றனர்.
வெளியிடங்களில் வேலை செய்துவிட்டு இரவு ரயில்களில் திரும்பும் பெண்கள் கூட ரோட்டை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

ரோந்து பணியில் இருக்கும் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். 


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment