(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 11, 2017

ராமநாதபுரம், கந்துவட்டி புகார் குறித்து சிறப்பு முகாம், ஏராளமான புகார்கள்!!

No comments :

ராமநாதபுரம், கந்துவட்டி புகார் குறித்து சிறப்பு முகாம் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் புகார் கொடுக்க வந்த பெண்கள் கதறி அழுதனர். கந்து வட்டி தொல்லை தாங்க முடியவில்லை என, புகார் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி குறித்து புகார் தெரிவிக்க எஸ்.பி., அலுவலகத்தில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் புகார் தெரிவிக்க வந்த பெண்கள் கூறியதாவது: கந்து வட்டிக்காக சம்பந்தப்பட்ட நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போலீசாரிடம் ஏற்கனவே கொடுத்த புகார்களில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் தெரிவித்தால், கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர்.

சம்பந்தப்பட்ட நபர்கள் மனுகொடுத்தவர்கள் மீது புகார் தெரிவிக்கின்றனர். போலீசார் அவர்களுக்கு சாதகமாகவே பேசி நடவடிக்கை எடுக்கின்றனர், என கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.


பல புகார்கள் வாகன கடன் நிறுவனத்தினர் மீது தெரிவித்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது: தனியார் வாகன கடன் பெற்றவர்கள், பணம் வசூலித்த பின்பு, வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். தொழில் இல்லாமல் முடங்கி கிடக்கும்எங்களிடம் வட்டிக்கு மேல் வட்டி போல் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். விவிசாயத்திற்கு டிராக்டர் வாங்கியவர் 5 ஆயிரம் ரூபாய் பாக்கிக்காக பல ஆயிரம் வட்டியாக கேட்பதாகவும், தெரிவித்தனர்.

ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்ததாவது:

கந்து வட்டி தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஒரு தரப்பினர் கருத்து மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. வட்டி வசூலிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் உரிய விசாரனை நடத்தப்படும்.
சட்டப்படி, பொருட்களை வைத்து கடன் பெறுவர்களிடம் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியும், எந்த விதி பாதுகாப்பும் இல்லாமல் வழங்கப்படும் கடனுக்கு 12 சதவீத வட்டியும் வசூலிக்கலாம், அதற்கு மேல் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பலரிடம் ஆதாரம், ஆவணங்கள் இல்லாமல் புகார் தருகின்றனர். அவர்கள் வழங்கும் புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கந்துவட்டிக்காரர்களுக்கு சாதகமாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் தெரிவித்தார்.


செய்தி: திரு. தாஹீர், கீழை


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment