(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 20, 2018

கீழக்கரை அருகே வாகன விபத்து; 27 பேர் காயம்!!

No comments :
கீழக்கரை அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தில் மினி சரக்கு வாகனம், திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி ரைஸ்மில் காலனியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மினிசரக்கு வாகனத்தில் கீழக்கரையில் நடந்த திருமண நாள் குறிக்கும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பினர். இவர்கள் சென்ற வாகனம் கீழக்கரை அருகே முள்ளுவாடி கிராமப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இதில், மினி சரக்கு வாகனத்தில் பயணம் செய்த கல்பனா, அமராவதி,பிச்சைமுத்து, சின்னப்பொண்ணு ஆகியோர் உள்பட 9 பேர் கீழக்கரை அரசு மருத்துவமனையிலும், சுமதி, புஷ்பவள்ளி, முத்துமாரி, நாகவள்ளி, முத்துக்கனி ஆகியோர் உள்பட 18 பேர் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், உடனடியாக தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அரசு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். அப்போது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், எலும்பு முறிவு மருத்துவர் மனோஜ்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

இந்த விபத்து குறித்து கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment