(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, May 12, 2018

மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவருகிறதா ராமநாதபுர மாவட்ட கிராமங்கள்?!!

No comments :

GAIL நிறுவனம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மேலும் சில கியஸ் பைப்புகளை பதிக்க தாசில்தார் தலைமையில் மக்களிடம் கலந்தாய்வு என்று அறிவிப்பு செய்யாமல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தகவல்களை தெரிவித்து காவல்துறை பாதுகாப்புடன் கலந்தாய்வு நடத்த முயற்சி செய்தது.

யாருக்கும் தெரியாமல் திருட்டுதனமாக நடத்த முயற்சி எதற்காக?!..யாரை திருப்தி படுத்த?!..யாரை ஏமாற்ற?!..

கூட்டத்தை நடத்தவிடாது மக்கள் அனைவருக்கும் தெரியபடுத்தி அனைத்து நிறுவன மேலாளர்களையும் வரவைத்து மீண்டும் ஒருநாள் நடத்த சொல்லி கூட்டத்தை கலைத்துவிட்டாச்சு.


வாலாந்தரவை சமுதாயகூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தை பற்றி வாலாந்தரவை மக்களுக்கே தெரியவில்லை, ஏற்கனவே 20 வருடங்களாக சிலரின் சுயலாபத்திற்க்காக ONGC,GAIL,RK PLANT மற்றும் EB ஆகியவை ஊருக்குள் நடத்த அனுமதி வழங்கிவிட்டனர் , Industrial சட்டத்தின்படி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து 15 Km அப்பால் தான் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கவேண்டும். ஆனால் எந்தவித சட்ட விதிகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் இந்த நிறுவனங்கள் அனுமதியின்றி 5,4,3,2 என்று ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளனர், ஆதலால் இந்தப்பகுதிகளில் கிணறுகளில் கூட தண்ணீர் இல்லாது தண்ணீர் பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவாகியுள்ளது. இதுவரை ஊராட்சியில் CSR - Corporate Social Responsibility கீழ் எந்தவித திட்டங்களும் பெரிதாக செயல்படுத்தவில்லை, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை, தொடர்ந்து இந்த நிறுவனங்களிலிருந்து வெளிவரும் இரைச்சல்களால் வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுகின்றது.

மேலும் ஊராட்சிகளில் தற்போது கேன்சர் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்திய நில உரிமையாளர்களுக்கு இன்னும் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை , இந்த நிலையில் மேலும் இடங்களை கையகப்படுத்த முனைகிறது கெயில் நிறுவனம்.
ஒரு சிலரின் சுயநலத்திற்க்காக ஒட்டுமொத்த ஊராட்சி கிராமங்களும் அழிவை நோக்கி!...

*இந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?..
*அப்போது போட்ட ஒப்பந்தம் எங்கே?...

*இந்த நிறுவனங்கள் வருடந்தோறும் கட்டும் பஞ்சாயத்து வரி எவ்வளவு?...

*எத்தனை ஆழ்துளைக் கிணறுக்கு அனுமதி கொடுக்கபட்டது?..
*இதுவரை செய்த CSR என்ன?..

* இழப்பீடு வழங்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் எங்கே?..
*விபத்து ஏற்பட்டால் அதற்க்கான முதலுதவி உபகரணம் மற்றும் தீயணைப்பு வாகனம், மருத்துவ வாகனம், அவசர ஊர்தி ஆகியவை எங்கே?...

*எத்தனை வருடம் இந்த நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது, அதற்கான கால நிர்ணயம்? ...

இப்படி பல கேள்விகளுடன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேள்வி கேட்டும் இன்றுவரை பயனில்லை?!..

ஜனவரி 26 நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட கேள்விகளை தீர்மானமாக நிறைவேற்றி, ஒரு மாதத்திற்க்குள் அனைத்து நிறுவனங்களும் பதிலாளிக்கவில்லை எனில் அவர்களுக்கு ஊராட்சி வருடாந்திர வரி இரசீது கொடுக்ககூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆனால் அதற்க்கு பதிலும் இல்லை பலனுமில்லை?!...

இதே நிலை தொடர்ந்தால் விரைவில் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களும் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும்!...
இளைஞர்கள் ஒருங்கிணைந்து விழிப்பணர்வுடன் செயல்பட்டு இதனை தடுக்காவிடில் நம் தலைமுறைகளின் வாழ்க்கை கேள்விக்குறியே???!...

X-------------------------------X

வாலாந்தரவை வாசகர் பிரவீன் அவர்களின் ஃபேஸ்புக் பதிவிலிருந்து.

நன்றி: திரு. ப்ரவீன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment