(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 26, 2018

கல்வி நிறுவன கட்டட அனுமதி பெற விண்ணப்பிக்க செப்.,13 கடைசி நாள்!!

No comments :

அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு செப்.,13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 1.1.2011க்கு முன் செயல்பட்டு வரும் கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதி பெற வேண்டும். வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில், ஜூன் 14ல் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

செலுத்த வேண்டிய ஒருமுறை கட்டணம், சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், அனுசரிக்க வேண்டிய சட்டங்கள் மற்றும் விதிகள், விண்ணப்பிக்க அவகாசம் போன்ற விவரங்கள் அரசாணையில் தெளிவாக உள்ளன. www.tn.gov.in/tcp என்ற இணையதளத்தில் அரசாணை நகல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த இணையதளம் வழியாக விண்ணப்பித்து, உரிய கட்டணத்தையும் செலுத்தலாம். செப்.,13 விண்ணப்பிக்க கடைசி நாள்.

இதனை பயன்படுத்த வேண்டும், என சிவகங்கை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் பரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதே போல், கட்டட வடிவமைப்பாளர், கட்டமைப்பு பொறியாளர் மற்றும் கட்டட உரிமம் பெற்ற வரைவாளர்கள், பணி முடிவு சான்று வழங்கும் குழுவில் உறுப்பினராக ஜூன் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என கூறியுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment