(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 14, 2019

ரூ.2 ஆயிரம் உதவித்தொகை - பட்டியலை சரிபார்க்க ஏராளமானோர் குவிந்தனர்!!

No comments :
தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையைப் பெறும் பயனாளிகள் பட்டியலை சரிபார்ப்பதற்காக கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை ஏராளமானோர் குவிந்தனர்.


வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாக தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்தார். 

இதனையடுத்து, அத்தொகையைப் பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளின் பட்டியலில் தங்கள் பெயர்கள் உள்ளனவா என சரிபார்ப்பதற்காக கமுதி, சிங்கபுலியாபட்டி, வெள்ளையாபுரம், கண்ணார்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். 


பட்டியலை சரிபார்த்த பின்னர் அதில் பெயர்கள் இருந்தால் அவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மனு அளித்தனர். 

இதுகுறித்து பேரூராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பெற்று, பரிசீலனை செய்து. வறுமை கோட்டிற்குகீழ் வாழும் மக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்றார். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment