(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 22, 2019

தனியார் பள்ளிகள் மே 31 ஆம் தேதிக்குள் அரசு அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும்!!

No comments :


தனியார் பள்ளிகள் வரும் மே 31 ஆம் தேதிக்குள் அரசு அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யணன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருடன், தனியார் பள்ளி முதல்வர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வொய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது சதக் தஸ்தகீர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யணன் தலைமை வகித்தார். தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கலந்துகொண்டனர்.


கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யணன் கூறியது:

தனியார் பள்ளிகள் வரும் மே 31 ஆம் தேதிக்குள் அரசு அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும். இணையதள வழியிலோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமோ அங்கீகாரத்துக்கு புதுப்பிக்கவும், புதிதாக அங்கீகாரம் பெறவும் விண்ணப்பிக்கலாம்.


மாவட்டத்தில் 17 பள்ளிகள் அங்கீகாரத்தை பெறும் நிலை உள்ளது. வரும் 28 ஆம் தேதி பள்ளி வாகனங்களுக்கான பரிசோதனை நடத்தப்படவுள்ளது. ஆகவே பள்ளி வாகன ஓட்டுநர்களுடன், உதவியாளர் ஒருவரும் கட்டாயம் பரிசோதனைக்கு வரவேண்டும் என்றார்.


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment