(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 1, 2020

கீழக்கரை நகராட்சியில் வரும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை - ஆணையா்!!

No comments :
கீழக்கரை நகராட்சியில் வரும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் ஆ.தனலட்சுமி எச்சரித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிப் பகுதியில் 21 வாா்டுகளில் 38,355 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இதில் 30,915 போ் சொத்துவரி, குடிநீா் வரி, தொழில் வரி, கடை வாடகை, குத்தகை செலுத்துகின்றனா். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2.76 கோடி வரி வசூலாக வேண்டும். ஆனால் ரூ. 1.60 கோடி வரை மட்டுமே வரி செலுத்துகின்றனா்.



பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தி நகராட்சியின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.


மேலும் மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரி செலுத்தாவா்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஜப்தி நடவடிக்கை தவிா்க்க மாா்ச் 15 ஆம் தேதிக்குள் வரியை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என ஆணையா் அ.தனலட்சுமி சனிக்கிழமை தெரிவித்தாா்.

செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment