(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 27, 2020

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மைய மாணவர் சேர்க்கை!!

No comments :

 

ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இயங்கிவரும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மையத்தில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ராமநாதபுரத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி நிர்வாகத் தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

 



ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மையம் செயல்பட்டு வருகிறது.

 


இங்கு நடப்பு ஆண்டுகக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இளநிலைப் படிப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், வணிகவியல் பெரு நிறுவன செயலகம் ஆகிய துறைகளும், முதுகலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், வணிக பெரு நிறுவன செயலகம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

 

பாடப்பிரிவுகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல அலுவலகம் (மதுரை) 0452-2458966 என்ற தொலைபேசி எண் மற்றும் 9791234586 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment