(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 7, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் 340 சுகாதார பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தகவல்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற 340 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்து உள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

 


மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையங்களில் உள்ள

218 இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கும்,
122 பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்,
சுகாதார ஆய்வாளர் பதவிக்கும்

ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

இதற்கு தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.12.21 அன்று மாலை 5 மணிக்குள்

செயற்குழு செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
ஒருங்கிணைந்த சுகாதார வளாகம்,
சிகில் ராஜவீதி,
கேணிக்கரை,
ராமநாதபுரம்

 

என்ற முகவரிக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

 

மேலும் விண்ணப்பப் படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும இணையதளம் (https://nhm.tn.gov.in) மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இணையதள (https://ramanathapuram.nic.in) வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

கூடுதல் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் நேரில் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment