(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 3, 2022

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 10 ஆம் தேதி குறை தீர் கூட்டம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகளைத் தீர்க்கும் கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்தூர் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடாபாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

 


வரும் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களும் பங்கேற்கின்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறவுள்ளது.

 

இந்த கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment