(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, March 13, 2015

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 246 பேர் கைது!!

No comments :
ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 246 பேர் போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அதிகரித்து வரும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்தவும், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறை தடை விதித்திருந்த நிலையில், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பிருந்து வியாழக்கிழமை அக்கட்சியை சேர்ந்தவர்கள் பேரணியாக வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி முற்றுகையிட சென்றனர்.
இந்த போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் (கிழக்கு) எம். சோமு தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் அப்துல்ஜமீல், மாநில வர்த்தக அணி செயலர் ஏ. முகம்மது சரீப் சேட், மாநில பொருளாளர் பி. கார்மேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தை நெருங்கிய போது ராமநாதபுரம் டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார் தலைமையிலான போலீஸார் அவர்களை மறித்து 178 பேரை கைது செய்தனர். போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் எஸ். செய்யது இப்ராகிம், மாவட்ட செயலர் எஸ்.அப்பாஸ்அலி ஆலிம், மாவட்ட பொருளாளர் ஏ.அப்துல் வஹாப், நகர் தலைவர் ஜெ.முகம்மது சுல்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி: பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வியாழக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இம்போராட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் முஹமதுஇசாக் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் அஸ்கர்அலி, பொருளாளர் அஹமது சித்திக், செயற்குழு உறுப்பினர் வேந்தை ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் நஸ்ருதீன் சிறப்புரையாற்றினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக அக்கட்சியைச் சேர்ந்த 68 பேரை போலீஸார் கைது செய்தனர்.

 செய்தி; தினமணி

No comments :

Post a Comment