(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, March 13, 2015

மாவட்ட அளவிலான செஸ் போட்டி - விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 25

No comments :
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் மார்ச் 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட செஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் வருகிற 29ம் தேதி தேவிபட்டினம் இசிஆர் ரோடு கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது.  இதில் 9, 11,13, 15 மற்றும் 17 வயது பிரிவுகளில் போட்டி நடத்தப்படும்.  போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும். 

போட்டிகளுக்கான நுழைவுப் படிவங்கள் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ராக்லண்ட் மதுரம், சாலமன் ரத்தினசேகரன், பரமக்குடி ஆர்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரோஸ்குமார், ராமேஸ்வரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே திரவிய சிங்கம், சாயல்குடி ரோஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதன்குமார், தேவிபட்டினம் இசிஆர் ரோடு கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் நெடுஞ்செழியன் ஆகியோரிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 25ம் தேதி மாலை 6 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் ராக்லண்ட் மதுரம் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment