(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 7, 2015

IPL 2015 - எட்டாவது IPL திருவிழா கோலாகலமாக துவங்கியது!!

No comments :
8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) டி20 கிரிக்கெட் போட்டி கோலாகலமாக துவங்கியது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் துவக்க விழா இன்று மாலை 7.30 மணிக்கு நடப்பதாக இருந்தது. திடீரேன மழை குறுக்கிட்டதால் விழா 9.00 மணிக்கு துவங்கியது. நடன கலைஞர் ரெமோ டி சவுசா, சந்தோஷ் ஷெட்டி மற்றும் 300 உள்ளூர் கலைஞர்களுடன் சேர்ந்து மொத்தம் 400 பேர் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோரின் கண்கவர் நடனம் இடம் பெறுகிறது. நடிகர்கள் சைப் அலி கான், பர்ஹான் அக்தர், இசையமைப்பாளர் பிரிதம் ஆகியோ ரும் இணைந்து வீரர்கள் மற்றும் நட்சத்திரங்களை அறிமுகம் செய்கின்றனர். 

இதில் முதல் முறையாக 8 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக்கொள்கின்றனர். பின்னர் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பிர், ஐ.பி.எல். கோப்பையை கொண்டு வந்து, 8வது தொடர் தொடங்கி விட்டதாக அறிவிப்பார்.  தொடக்க விழா நிகழ்ச்சி யை தொடர்ந்து நாளை முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது. ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கீழே உள்ள ”செட்யூளை” பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி “ரைட் க்ளிக்” செய்து பதிவிறக்கிக்கொள்ளவும்.

No comments :

Post a Comment