(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 25, 2015

கீழக்கரை வடக்குத்தெரு கவுன்சிலரின் புகார் மற்றும் அறிக்கை!!

No comments :


கீழக்கரை வடக்குத்தெரு கழிவுநீர் அகற்றும் மோட்டார் மற்றும் ஜெனரேட்டர் பழுதுபார்க்க கவுன்சிலர் மனு.


இது சம்பந்தமான கவுன்சிலரின் அறிக்கை:
ஆறு வார்டுகளிலிருந்து வரும் கழிவு நீர் சேருமிடம் தட்டாந்தோப்பு. படத்தில் உள்ளது தான் அந்த பம்பிங் ரூம்..அதில் 10hp மோட்டார் ஒன்றும்.5 hp மோட்டார் ஒன்றும் உள்ள்து.



மின்சாரம் இல்லை என்றால் ,அதை இயக்குவதற்கு ஒரு ஜெனெரேட்டர் ஒன்று தனியாக உள்ள‍து.

சில தினங்கலுக்கு முன்பு 10hp மோட்டார் பழுதடைந்தது..இதனால்தான் 20வது வார்டு வாழைக்கொல்லையில் தண்ணீர் வெளியேரியது உடனே நான் கமிஸ்ன‌ருக்கு தகவல் கொடுத்தேன்.பிற‌கு மனு அளித்தேன்.எனது கோரிக்கையை ஏற்று10hp மோட்டார் பழுதுபார்க்கப்பட்டது. தற்போது அந்த‌ இடம் சீராக உள்ள‍து.

மின்சாரம் இல்லை என்றால் ஓடும் ஜெனெரேட்டர் மூலமாக இது இயக்கபட வேண்டும் ஆனால் ஜெனெரேட்டர் தற்போது பழுதடைந்துள்ள‍து. அந்த கழிவுனீர் ரூமில், உள்ள‍ 5hp மோட்டாரும் பழுதடைந்துள்ள‍து.
ஜெனெரேட்டரையும் 5hp மோட்டாரையும் பழுதுபார்த்து தரும்படி சேர்மனிடமும், SI தின்னாயிரமூர்த்தியிடமும், C.முருகேசன் கமிஸ்னரிடமும், து..மே.மனோகரனிடமும் பலமுறைகூறியும் இன்னும் 
பழுதுபார்க்கவில்லை.

தயவு செய்து நண்பர்களாகிய‌ நீங்கள் நகராட்சி நிர்வாகிகள் / அலுவலர்களை
  தொடர்புகொண்டு வார்டு கவுன்சிலர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு கூறுங்கள்.

கவுன்சிலராக இருந்தாலும் சரி .இல்லை என்றாலும் சரி என்னுடைய
 25 வருடம் மக்கள் பணி தொடர்ந்துக்கொண்டேயிருக்கும்.
மக்கள் பணியில் குறை இருந்தால் கூறுங்க‌ள் சரி செய்வோம்.பிழை இருந்தால் மன்னிக்கவும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

செய்தி: திரு ஹாஜா நஜ்முதீன்,

20ம் வார்டு கவுன்சிலர், கீழக்கரை



No comments :

Post a Comment