(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 13, 2015

ராமநாதபுரத்தில் குரூப்-2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வி   படிப்பினை முடித்தவர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்காக அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1,குரூப்-2,குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணி, காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.


ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள குரூப்-2 தேர்விற்காக இலவசமாக அரசின் சார்பில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் 250 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இப்பயிற்சியினை பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் பயிற்சியினை வழங்கி வருகின்றனர்.

இப்பயிற்சி பெறுபவர்களுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வகை நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக, ராமநாதபுரம் ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர் புதன்கிழமை கூறியது: இப்பயிற்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த       போட்டித் தேர்வுகளுக்கு தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பயிற்சியில் இணைந்து பயின்று வருகின்றனர்.

இதுவரை நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகளில் பலரும் இப்பயிற்சியினைப் பெற்று வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். எனவே இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினசரிகள்


No comments :

Post a Comment