(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 1, 2015

இடைத்​தேர்த​லில் ஜெயல​லிதா வெற்றி, இராமநாதபுர மாவட்டத்தில் கொண்டாட்டம்!!

No comments :
சென்னை ஆர்.கே.​ நகர் இடைத்​தேர்த​லில் ஜெயல​லிதா வெற்றி பெற்​றதை அடுத்து,​​ சிவ​கங்கை,​​ ராம​நா​த​பு​ரம் மாவட்​டங்​க​ளில் பல்​வேறு இடங்​க​ளில் செவ்​வாய்க்​கி​ழமை அதி​மு​க​வி​னர் பொது​மக்​க​ளுக்கு இனிப்பு வழங்​கிக் கொண்​டா​டி​னர்.​

சிவ​கங்கை மாவட்​டச் செய​ல​ரும்,​​ மக்​க​ளவை உறுப்​பி​ன​ரு​மான பி.ஆர்.​ செந்​தில்​நா​தன் தலை​மை​யில்,​​ அக்​கட்​சி​யி​னர் எம்.ஜி.ஆர்.​ சிலைக்கு மாலை அணி​வித்​த​னர்.​ பின்​னர்,​​ ​ அவ்​வ​ழியே பேருந்​தில் பய​ணம் செய்த பய​ணி​கள் மற்​றும் பொது​மக்​க​ளுக்கு இனிப்​பு​கள் வழங்​கி​னர்.​ இந் நிகழ்ச்​சி​யில்,​​ சிவ​கங்கை நக​ரச் செய​லர் ஆனந்​தன்,​​ மாண​வ​ரணி ராஜா ஜாக்கு​லின் அலெக்ஸ்,​​ சிவாஜி,​​ வழக்​கு​ரை​ஞர் பிரிவு சுந்​த​ர​பாண்​டி​யன்,​​ தொகு​திச் செய​லர் சொர்ண​லிங்​கம்,​​ நகர்​மன்ற துணைத் தலை​வர் சுந்​தர​லிங்​கம் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.​



ராம​நா​த​பு​ரத்​தில் கொண்​டாட்​டம்:​ ​ 

ராம​நா​த​பு​ரம் அரண்​மனை முன்​பாக,​​ அதி​முக மாவட்​டச் செய​லர் ஆர்.​ தர்​மர் தலை​மை​யில் அக்​கட்​சி​யி​னர் பொது​மக்​க​ளுக்கு இனிப்பு வழங்​கி​யும்,​​ பட்​டாசு வெடித்​தும் கொண்​டா​டி​னர்.​ இந்​நி​கழ்ச்​சி​யில்,​​ கட்​சி​யின் அவைத்​த​லை​வர் செ.​ முரு​கே​சன்,​​ நகர் செய​லர் அங்​குச்​சாமி,​​ மாவட்ட மாண​வ​ர​ணிச் செய​லர் செந்​தில்​கு​மார்,​​ மாவட்ட மாண​வ​ரணி ஒன்​றிய இணைச் செய​லர் சபரி.​ தயா​மதி,​​ மாவட்ட திட்​டக் குழு உறுப்​பி​னர் கே.சி.​ வர​தன்,​​ நகர்​மன்ற உறுப்​பி​னர்​கள் வீர​பாண்டி,​​ தன​சே​க​ரன்,​​ குமார் உள்​ளிட்ட பல​ரும் கலந்​து​கொண்​ட​னர்.​

முது​கு​ளத்​தூர்,​​ கட​லா​டி​யில் அதி​மு​க​வி​னர் கொண்​டாட்​டம்:​​ ​ ​ முது​கு​ளத்​தூர்,​கட​லாடி,​​ சாயல்​குடி பகு​தி​க​ளில் அதி​மு​க​வி​னர் பட்​டாசு வெடித்​தும்,​​ இனிப்பு வழங்​கி​யும் கொண்​டா​டி​னர்.​ ​

முது​கு​ளத்​தூ​ரில்,​​ கவுன்​சி​லர் உடை.​ எம்.​ சிவக்​கு​மார் தலை​மை​யி​லும்,​​ ஒன்​றிய இளை​ஞ​ர​ணிச் செய​லர் தூரி மாட​சாமி,​​ நகர் பேரவை இணைச் செய​லர் அர்ச்​சு​னன்,​விவ​சாய அணி இணைச் செய​லர் வி.​ கருப்​பு​சாமி ஆகி​யோர் முன்​னி​லை​யி​லும்,​​ அதி​மு​க​வி​னர் பட்​டாசு வெடித்​தும்,​​ பொது​மக்​க​ளுக்கு இனிப்பு வழங்​கி​யும் கொண்​டா​டி​னர்.​

இதில்,​​ கவுன்​சி​லர்​கள் சீனி,​​ சர​வ​ணன்,​​ முரு​கன்,​​ அண்ணா தொழிற்​சங்க நிர்​வா​கி​கள்,​​ மாண​வ​ர​ணிச் செய​லர் சி.​ தமிழ்,​​ வழக்​கு​ரை​ஞர் பிரிவு செய​லர் அழ​கு​முத்து,​​ நகர் மக​ளிர் அணி செய​லர் மணி​மே​கலை,​​ ஊராட்​சித் தலை​வர்​கள் மாயக்​கண்​ணன்,​​ ராமர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

கட​லா​டி​யில்,​​ ஒன்​றி​யக் கழ​கச் செய​லர் கே.​ முனி​ய​சாமி பாண்​டி​யன் தலை​மை​யில் பட்​டாசு வெடித்து,​​ இனிப்பு வழங்கி கொண்​டா​டப்​பட்​டது.​ இதில்,​​ ஒன்​றி​யக் குழு துணைத் தலை​வர் பத்​ம​நா​தன்,​​ ஒன்​றிய அவைத் தலை​வர் வேலுச்​சாமி,​​ நக​ரச் செய​லர் முரு​கன்,​​ கவுன்​சி​லர்​கள்,​​ ஊராட்​சித் தலை​வர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

சாயல்​கு​டி​யில்,​​ ஒன்​றி​யக் குழுத் தலை​வர் வீ.​ மூக்​கையா தலை​மை​யில்,​​ அக்​கட்​சி​யி​னர் பொது​மக்​க​ளுக்கு ​ இனிப்பு வழங்​கி​யும்,​​ பட்​டாசு வெடித்​தும் கொண்​டா​டி​னர்.​ இதில்,​​ ஒன்​றி​யச் செய​லர் அந்​தோ​ணி​ராஜ்,​​ மாவட்ட எம்.ஜி.ஆர்.​ மன்​றச் செய​லர் எம்.​ செய்​யது காதர்,​​ நக​ரச் செய​லர் சுப்​பி​ர​ம​ணி​யம் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.​


செய்தி: தினமணி

No comments :

Post a Comment