(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 13, 2015

கீழக்கரை அருகே பூட்டிய வீட்டில் 24 பவுன்நகை மற்றும் பணம் திருட்டு!!

No comments :
கீழக்கரை அருகே பூட்டிய வீட்டில் 24 பவுன் நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரை அருகே உள்ள மாவிலாத்தோப்பில் மளிகைக்கடை நடத்தி வருபவர் முருகேசன். இவர் வெள்ளிக்கிழமை  ராமநாதபுரத்துக்கு   சென்றுள்ளார்.


இவரது மனைவி தங்கராணி(40) வீட்டை பூட்டிவிட்டு மளிகை கடைக்குச் சென்று விட்டார்.  இதை பயன்படுத்திய மர்ம நபர்கள் முருகேசன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 24 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.

கடையிலிருந்து திரும்பி வந்த தங்கராணி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்த போது திருடு போயிருப்பது தெரியவந்தது.


இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment