(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 14, 2015

ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு இளைஞர் ஜோதி தொடர் ஓட்டம் நாளை அக்டோபர் 15ம் தேதி தொடங்குகிறது!!

No comments :

நாளை அப்துல்கலாம் பிறந்த நாள் விழா: ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு இளைஞர் ஜோதி தொடர் ஓட்டம்
அப்துல்கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்திலிருந்து சென்னைக்கு இளைஞர் ஜோதி தொடர் ஓட்டத்தினை ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனன் தொடக்கி வைக்கிறார்.

இதுகுறித்து தொடர் ஓட்டத்தின் அமைப்பாளர் நந்தகுமார் கூறியது..
அப்துல் கலாமின் லட்சிய இந்தியா இயக்கம், ராமநாதபுரம் கோல்டன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு தடகள கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து அப்துல் கலாமின் கனவுகளை இளைஞர்கள் நிறைவேற்ற உறுதி எடுத்துக் கொள்ளும் வகையில் இளைஞர் ஜோதி தொடர் ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஓட்டத்தை ராமேசுவரத்தில் அப்துல்கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மற்றும் கலாமின் பேரன் ஷேக்சலீம் ஆகியோர் ஜோதியை ஏற்றி வைத்து அதை இளைஞர்களிடம் கொடுக்கின்றனர்.

பின்னர் ஜோதியானது கலாம் பயின்ற பள்ளி, ராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயில் ரதவீதிகள் வழியாக கலாம் நினைவிடத்திற்கு வருகிறது. அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கலாமின் உறுதிமொழியை வாசிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தொடர் ஓட்டத்தை ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனன் கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். பின்னர் ராமநாதபுரம், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னையில் ஓட்டம் நிறைவு பெறும். இந்த ஓட்டமானது தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள 70க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கலாமின் கனவுகளை நிறைவேற்ற மாணவர்கள் எவ்வாறு பாடுபட வேண்டும் என்ற லட்சிய விதைகளை விதைத்துக் கொண்டே போவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது ரோட்டரி சங்க ஆளுநர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா, தடகள சங்க மாவட்ட செயலர் சாதிக்அலி, கோல்டன் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
  

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment