(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 17, 2015

ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ராமேசுவரத்தில் பொதுக்கூட்டம், 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை அனைவரும் ஆதரிக்கவேண்டும் - விஜயகாந்த்!!

No comments :
தமிழகத்தில் தே.மு.தி.க. இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்கமுடியாது என்று விஜயகாந்த் பேசினார்.


ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மக்களுக்காக மக்கள் பணி” திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும்விழாமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி மாணவர் தினவிழாபொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் ராமேசுவரத்தில் நேற்றிரவு நடந்தன. விழாவுக்கு மாவட்ட செயலாளர் சிங்கைஜின்னா தலைமை தாங்கினார். நகர் செயலாளர் முத்துக்காமாட்சி வரவேற்றார். மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ்மீனவரணி செயலாளர் முருகநாதன்மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன்பொருளாளர் திலீப்காந்த் உள்பட பலர் பேசினர். 




விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:- 

அப்துல்கலாம் பிறந்தநாள் தே.மு.தி.க. சார்பில் மாணவர்கள் தினமாக தமிழகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. கலாம் பிறந்த ஊரான ராமேசுவரத்தில் இதை கொண்டாட முடிவு செய்யப்பட்டு அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கேப்டன் மட்டுமே அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கு வந்துள்ளார். இங்கு கூடிஉள்ள கூட்டத்தை காணும்போது ஆட்சிமாற்றம் ஏற்படும் என்பது உறுதியாகத் தெரிகிறது. 

இறுதிவரை அப்துல்கலாம் மாணவர்களுடன் இருந்ததால் அவரது பிறந்த நாளை மாணவர் தினம் என்று அறிவிப்பதே சரியானது. விவேகானந்தர் பிறந்தநாள் இளைஞர்கள் தினமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம் கனவு ஊழல் இல்லாத ஆட்சி அமைவது, கேப்டன் ஒருவரால் தான் ஊழல் இல்லாத ஆட்சியை தரமுடியும். 

கடிதம் எழுதினால் போதுமா?

சென்னையில் இருந்து கோவை சென்று கொடநாடு செல்லமுடிந்தவர்கள், ராமேசுவரத்துக்கு வராதது வேடிக்கையாக உள்ளது. ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 படகுகளையும் 24 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர். இதற்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதுகிறார். கருணாநிதியும் இதைத்தான் செய்தார். 

தேர்தல் காலத்தில் ஜெயலலிதா விலைவாசி உயர்வை பட்டியலிட்டு மேடையில் பேசினார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்தபின்னர் மேலும் விலைவாசி உயர்ந்துள்ளது. நானும் கேப்டனும் உண்மையை மட்டுமே பேசுவோம். அரசு பள்ளிக்கூடங்களில் கழிப்பிடவசதி, குடிநீர்வசதி இல்லை, மதிய உணவு தரமானதாக இல்லை. இலவசமாக வழங்கப்படும் பொருட்கள் தரமாக இல்லை. தமிழகத்தில் தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே மக்களே இல்லை என்ற நிலை உருவாகும். பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும். அரசுபஸ்கள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க வருகிற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை மக்கள் ஆதரிக்கவேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

பூரண மதுவிலக்கு

தொடர்ந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:- 

மறைந்த அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் உள்பட அனைவரும் வந்தனர். ஆனால் முதல்-அமைச்சர் வரவில்லை. இதில் இருந்து அவரது மனநிலை என்னவென்று புரிந்துகொள்ளவேண்டும். 

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்துக்கு நன்மை ஏற்படாது. மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் இலங்கை கடற்படை தொல்லை கொடுத்து வருகிறது. இதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் யாருக்கும் பயப்படமாட்டேன். தமிழகத்தில் தே.மு.தி.க. இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சி அமைக்க, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை அனைவரும் ஆதரிக்கவேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

நலத்திட்ட உதவிகள்

பின்னர் மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்கள், மடிக்கணினி, உபகரணங்கள் மற்றும் 3 மீனவ குடும்பங்களுக்கு உதவி உள்பட ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் வழங்கினார். முடிவில் நகர் அவைத்தலைவர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் இபுராகிம், கதிர்வேலன், பெரியபட்டணம் தொழில் அதிபர் சிங்கம்பசீர், தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னையா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் நம்பி ஹரிராம்,நகர் செயலாளர்கள் முத்தீஸ்வரன், அன்பு தெட்சிணாமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் சண்முகசுந்தரம்,துணைசெயலாளர் நாராயணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அப்துல்ஹக்கீம், வேல்மயில்முருகன், ராமநாதன், அசோக்குமார், முருகன், பேரூர் கழக செயலாளர் மாணிக்கவேல்,கேப்டன் மன்ற துணைச்செயலாளர் நியூட்டன், நகர் அவைத்தலைவர் செந்தில், பொருளாளர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

செய்தி: தினத்தந்தி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment