(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 3, 2015

ராமநாதபுரத்தில் இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் ரூ. 25 லட்சம் நகை, பணம் கொள்ளை!!

No comments :
ராமநாதபுரத்தில் இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு கதவை உடைத்து ரூ. 25 லட்சம் நகை, பணம் திருடு போனது.

ராமநாதபுரம் நகர் பாம்பூரணி சாலையில் இறால் பண்ணை நடத்தி வருபவர் முகம்மது ரபீக் (51). இவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் பெரியபட்டிணத்தில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவிற்கு சென்று விட்டு வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது, வீட்டின் பின்புற கிரில் கதவுகள் உடைக்கப்பட்டிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ரபீக், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 54 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.3.30லட்சம் உள்பட மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், கால் தடயங்களை அழிப்பதற்காக பினாயிலை தரையில் ஊற்றிச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.



தகவலறிந்த ராமநாதபுரம் ஏ.எஸ்.பி. சர்வேஷ் ராஜ் நேரில் சென்று சம்பவஇடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கேணிக்கரை காவல் ஆய்வாளர் (பொறுப்பு)விவேகானந்தன்,சார்பு-ஆய்வாளர் கணேசலிங்க பாண்டியன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment