(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 7, 2015

பரமக்குடியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலர் மீது வழக்கு!!

No comments :

பரமக்குடியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 பரமக்குடி தெற்கு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மதுபாரூக் மகன் முகமதுஇபுராஹிம் (56). இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் முத்தரசன் (25) மற்றும் அவரது நண்பர் மார்க்கண்டயன் மகன் பாண்டி (25) ஆகிய இருவரும் குடிபோதையில் தகராறு செய்தனராம்.


 இதனைப் பார்த்த எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலர் அஸ்கர்அலி மற்றும் அலாவுதீன், அம்சத்கான் உள்பட பலர் சேர்ந்து முத்தரசன், பாண்டி ஆகிய இருவரையும் வீடு புகுந்து தாக்கினராம். இதில் முத்தரசன் பலத்த காயமடைந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் முத்தரசனின் தாயார் சுசீலா அளித்த புகாரின் பேரில் போலீஸார் அஸ்கர்அலி, அலாவுதீன், அம்சத்கான் மற்றும் பலர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். அதே போல் முகமதுஇபுராஹிம் அளித்த புகாரின் பேரில் முத்தரசன், பாண்டி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து பாண்டியை கைது செய்தனர்.

செய்தி: தினமணி


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment