(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 28, 2015

ராமநாதபுர மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம்!!

No comments :
     
ராமேசுவரத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களிடம் குறைகேட்டு மனுக்கள்பெறும் முகாம் நடைபெற்றது.


ராமேசுவரம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறை கேட்டு மனுக்கள் பெறும் முகாம் நடை பெற்றது. இதையொட்டி ராமேசுவரத்திற்கு வந்த அன்வர்ராஜா எம்.பி.யை நகரசபை தலைவர் அர்ச்சுனன் வரவேற்றார். தொடர்ந்து ராமேசுவரம் காட்டுப் பிள்ளையார் கோவில் மற்றும் ராம தீர்த்தம் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு மனுவையும் பெற்றுக் கொண்டார். அப்போது எம்.பி.யிடம் ஏராளமான பெண்கள் முதியோர் உதவி தொகை,விதவை பெண்களுக்கான உதவி தொகை கேட்டும் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டும் மனு அளித்தனர்.



மனுவை பெற்றுக் கொண்ட எம்.பி. அனைத்து மனுவையும் பரிசீலித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி அதற்கான ஏற்பாடு களை செய்து தருவதாகவும் தெரிவித்தார். அப்போது உடன் ராமேசுவரம் நகரசபை தலைவர் அர்ச்சுனன்,துணை தலைவர் குணசேகரன்,கட்சியின் நகர் செயலாளர் பெருமாள்,அவை தலைவர் பிச்சை, துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் முனியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கே.கே.அர்ச்சுனன், கவுன்சிலர்கள் நாகசாமி, ராதாகிருஷ்ணன்,வீட்டுவசதி சங்க துணைத்தலைவர் ஸ்ரீகாந்த், மின் வாரிய பிரிவு கோட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், மேலவை பிரதிநிதி முனியசாமி, நிர்வாகிகள் அன்னகர்ணன், மாங்குடி செந்தூரான், சுதாகர், ராஜேந்திரன், வஸ்தாவிவெற்றிவேல், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.
இதேபோல் ஓலைக்குடா, மாங்காடு, சம்பை, ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், எம்.ஆர்.டி.நகர், தெற்கு கரையூர் போன்ற பகுதிக்கும் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அன்வர்ராஜா எம்.பி. குறைகள் கேட்டு மனுவை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார். 

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment