(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 28, 2015

கலைகட்டும் ராமநாதபுர மாவட்ட புத்தகத்திருவிழா!!

No comments :
ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் புத்தகதிருவிழாவில் ஏராளமான மாணவமாணவிகள் கலந்து கொண்டுபுத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 23–ஆம் தேதி முதல் கலாம் புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் 134 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதனை மாணவமாணவிகள் பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த நாட்களாக ஏராளமான மாணவமாணவிகள்பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் மாணவமாணவிகள் தாமாக முன்வந்து உண்டியலில் பணம் சேமித்து புத்தகத்தை வாங்கிப் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டு புத்தகம் வாங்கிட ஊக்குவிக்கப்பட்டனர். ரூ.10 முதல் ரூ. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் பார்வைக்கும்விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.


தினசரி மாலையில் அறிஞர்களுடனான கலந்துரையாடல்கள்சிந்தனையாளர்கள்கவிஞர்கள்எழுத்தாளர்களின் சிறப்புரைகள் நடைபெறுகிறது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment