(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 10, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணிக்கு கணினி இயக்குநர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணிக்கு பெல் நிறுவனத்தினரால் தற்காலிகமாக கணினி இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புகைப்படம் எடுக்கும் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விரைவாக தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் கார்டு அவசியம் இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு ரூ.5 வீதம் வழங்கப்படும். எனவே இப்பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் தங்கள் கல்விச்சான்றிதழ்களுடன் உடனடியாக கலெக்டர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


மேலும் விபரங்களுக்கு 96294 43133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment