(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 4, 2015

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

No comments :
ரயிலில் பட்டாசு, எளிதில் எரியும் பொருள்களை எடுத்து செல்லும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரித்தனர். 

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு, புத்தாடை, இனிப்புகளை வாங்கி பயணிகள் ரயிலில் பயணிப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் பட்டாசுகள் மற்றும் எளிதில் எரியும் பொருள்களை ரயிலில் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் எஸ்.ஐ. சிவகாமி தலைமையில் போலீசார், சென்னை, மதுரை செல்லும் ரயில் பயணிகளுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

தடையை மீறி பட்டாசு, எளிதில் வெடிக்கும் பொருள்களை பயணிகள் எடுத்து சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். நேற்று, ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரயிலில் செல்ல அனுமதித்தனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment