(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 17, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம், ஒருவர் உயிரிழப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடலோர பகுதியிலேயே அதிகஅளவில் பெய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. பருமழையுடன் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை பெய்துவருகிறது. மாவட்டத்தில் வடகிழக்கு பருமழை வழக்கமாக செப்டம்பர் 3-வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அக்டோபர் மாத மத்தியில்தான் தொடங்கி வருகிறது. 

இதேபோல, இந்த ஆண்டும் அக்டோபர் 28-ந் தேதிதான் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. 


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை கால வரையல் பெய்த மழையளவு (மி.மீட்டரில்) 
கமுதி-4, 
முதுகுளத்தூர்-1, 
பாம்பன்-22.08, 
பரமக்குடி-4, 
ராமநாதபுரம்-6.02, 
திருவாடானை-15, 
தொண்டி-16.03, 
பள்ளமோர்களம்-8, 
மண்டபம்-20.06, 
ராமேசுவரம்-40.02. 
தங்கச்சிமடம்-27.02, 
வட்டாணம்-15, 
தீர்த்தாண்டதானம்-17, 
ஆர்.எஸ்.மங்கலம்-10,
கடலாடி-2, 
வாலிநோக்கம்-1.04. 

மொத்த மழையளவு-208.27. 
சராசரி மழையளவு-13.02.


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் நடுத்தெருவைச் சேர்ந்த குப்பு மகன் காளிதாஸ் (61). இவர் வீட்டில் இருந்த போது,மழையின் காரணமாக வீட்டுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காயமைடந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக திருவாடானை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment