(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 18, 2015

பெரியபட்டினத்தில் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை!!

No comments :
பெரியபட்டினத்தில் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். தடயத்தை மறைக்க வீட்டுக்குள் மிளகாய் பொடியை தூவியிருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள பெரியபட்டினம் காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் சேகுமுகைதீன் (43). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமாபீவி (35). இவர், திங்கள்கிழமை இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.


இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை அவர் தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பின்புற வாசல் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் பீரோவில் இருந்த ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.2,500 ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.  இச்சம்பவம் குறித்து அவர் திருப்புல்லாணி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், துணை கண்கானிப்பாளர் முத்துராலிங்கம் தலைமையில், ஆய்வாளர் ஆனந்த், உதவி ஆய்வாளர் ஜேசுதாஸ் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில், வீட்டின் பெரும் பகுதியில் அடையாளம் காண இயலாதவாறு மர்ம நபர்கள் மிளகாய் பொடியைத் தூவிச் சென்றுள்ளது தெரியவந்தது.   

இச்சம்பவம் தொடர்பாக கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment