(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 5, 2016

கீழக்கரையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை!!

No comments :

கீழக்கரை எஸ்.என்.தெருவை சேர்ந்தவர் முனியசாமி. சேதுக்கரையில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி கடந்த சில மாதங்களுக்குமுன் இறந்துவிட்டாராம். இந்தநிலையில் திருமணத்திற்கு முதல் நாள் முனியசாமியின் மகன் சங்கர் கீழக்கரை கடற்கரை பகுதியில் தவறி விழுந்து பலியானார். தாய்,அண்ணன் இறந்ததால் முனியசாமியின் மகள் லாவண்யா (வயது 22) மனமுடைந்து காணப்பட்டாராம்.



ஈரோட்டில் மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த லாவண்யா விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார். இந்தநிலையில் தனது தம்பி வினோத்குமாரிடம் சாப்பாடு வாங்கி வரும்படி கூறியுள்ளார். அவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் லாவண்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக லாவண்யாவின் பெரியம்மா நாகவள்ளி அளித்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பொந்துமுனியாண்டி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

செய்தி: தினத்தந்தி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment