(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 11, 2016

தேவிபட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பார்கவி பிரசாரம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பார்கவி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.




திருவாடானை தொகுதியில் போட்டியிடும் இக்கட்சியின் மாநில வர்த்தக அணியின் துணைத் தலைவர் ஏ. முகம்மது ஷெரீப் சேட் எரிவாயு உருளை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பார்கவி தேவிபட்டினம், பனைக்குளம், சித்தார்கோட்டை, புதுவலசை ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், திருவாடானை தொகுதியில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும் அவர் பேசினார். பிரசாரத்தின்போது, கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment