(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 16, 2017

ராமேசுவரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொண்டாடிய பொங்கல் விழா!!

No comments :
ராமேசுவரம் தமிழ்நாடு ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் வைத்துக் கொண்டாடினார்கள்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ராமேசுவரம் தமிழ்நாடு ஹோட்டலில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டு கிராமிய கலைஞர்களின் இசைக்கேற்ப நடனமாடினர்.

பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்தனர். விழாவில் சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலைகளும் நிகழ்த்திக் காட்டப்பட்டன. பொங்கலோ பொங்கல் என்று அனைவரும் குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விழாவில் சுற்றுலாத்துறை அலுவலர் பாலசுப்பிரமணியன், நகர்மன்ற முன்னாள் தலைவர் அர்ச்சுணன், நீர்விளையாட்டுக் குழும அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஜர் பெர்ணாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment