(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 2, 2017

ராமநாதபுரம் அருகே ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், 12 மாணவர்கள் கைது!!

No comments :
ராமநாதபுரம் அருகே ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தியதாக 12 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பனைக்குளம் பகுதியில் கிருஷ்ணாபுரம் உள்பட மாவட்டத்தில் 12 இடங்களில் ஹைட்ரோ கார்பன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் கிருஷ்ணாபுரம் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அதை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர் திருமுருகன் தலைமையில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 12 மாணவர்கள் திடீரென தேவிப்பட்டிணம் பேருந்து நிலையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவலறிந்த ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.எஸ்.சர்வேஷ்ராஜ் தலைமையில் தேவிப்பட்டிணம் காவல் ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்று 12 பேரையும் கைது செய்தனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment