(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 15, 2017

விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க நவ-30ம் தேதி கடைசி நாள்!!

No comments :
மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகளால் களைக்கொல்லி மற்றும் உரம் இடும் பணிகள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை இதுவரையிலும் குறைவாகவே பெய்துள்ளதால் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர்.


இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் மூவிதழ் அடங்கல் கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகளில் ஒரு ஏக்கருக்குரிய பிரீமியத் தொகையான ரூ.332ஐ செலுத்தி காப்பீடு செய்யலாம்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் காப்பீடு செய்ய விருப்பமுள்ளவர்கள் கண்டிப்பாக மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அவ்வாறு கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக சேமிப்பு கணக்கு தொடங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் வருகிற 30–ந்தேதியாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் காப்பீட்டு நிறுவனத்திற்கு 30–ந்தேதிக்குள் அனுப்பப்பட வேண்டியுள்ளதால் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து அடங்கல் சான்றினை பெற்று காப்பீடு செய்யும் பணியினை வருகிற 25–ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment