(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 5, 2018

ராமநாதாபுர மாவட்டத்தில் அனுமதியின்றி உறிஞ்சப்படும் நிலத்தடிநீர்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடிராமநாதபுரம்ராமேஸ்வரம்தொண்டிமுதுகுளத்தூர் ஆகிய ஊர்களின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள்கல்லூரிகள்மருத்துவமனைகள் என வளர்ச்சியடைந்து வருகிறது. இவர்களுக்கு தேவைப்படக் கூடிய குடிநீர்கிராமங்களில் விவசாய கிணறுகளில் மின் மோட்டார்ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் லாரிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த லாரிகள் ஆயிரம் முதல் 30 ஆயிரம் லிட்டர் வரை கொள்ளளவு கொண்டதாக உள்ளது.



எந்தவிதமான அங்கீகாரமும் இல்லாமல், தனிநபர்கள் நிலத்தின் நீரை உறிஞ்சி கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். எந்த வரியும் செலுத்தாமல் கிணறு உரிமையாளர்களுக்கு சிறிது பணத்தை கொடுத்து விட்டு பல லட்சங்களை சம்பாதித்து வருகின்றனர்.

முறையற்ற விதங்களில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் பணத்தை பெற்றுகொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதால், விவசாயம் கேள்விகுறியதாக மாறியுள்ளது.

ஆகையால் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் உடன் கவனம் செலுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment