(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 28, 2018

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளக்ஸ் போர்டுகள் ஆக்கிரமிப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பிளக்ஸ் போர்டுகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது. ராமநாதபுரத்துக்கு அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் வரும்போது கட்சி நிர்வாகிகள் கொடிகள்விளம்பர பிளக்ஸ் போர்டுகளை வரவேற்று புதிய பஸ் ஸ்டாண்டுபழைய பஸ் ஸ்டாண்டுபாரதி நகர் பகுதியில் வைக்க தொடங்கினர். தற்போது ரோமன் சர்ச்சாலை தெருகேணிக்கரை என அந்த பட்டியல் நீண்டு வருகிறது. ராமநாதபுரம் நகர் பகுதியை சேர்ந்த பள்ளிகல்லூரிகளின் பிளக்ஸ்போர்டுகள் நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டு வருகிறது. 

இதுதவிர தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கல்யாண மகாலில் திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். சாலையை மறைத்து திருமண விளம்பர பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே இரவு நேரத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சாலையோரத்தில் பிளக்ஸ்போர்டுகளும் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டுநர்கள் விழிபிதுங்கி உள்ளனர். சாலைதெரு பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதால் சிறிய வாகனங்கள் வருவது தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் சிரமம் அடைகின்றனர். 




பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் போக்குவரத்து போலீசார் நகரில் உள்ள விளம்பர போர்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாகன ஓட்டுநர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான நல்ல விசயங்களை தெரிவிக்கும் வழிகாட்டு பலகை இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களை தங்களின் பொருட்களை வாங்க தூண்டும் விளம்பர பலகைகள் இல்லாத இடமில்லை என்ற நிலை உருவாகி விட்டது. ஏற்கனவே பிளக்ஸ் போர்டுகளின் ஆபத்தை உணர்ந்து தமிழக அரசு 2003ல் பல சட்ட விதிகளை வகுத்துள்ளது. 

இருப்பினும் இந்த விதிகளை யாரும் பின்பற்றுவது கிடையாது. பெரிய அளவிலான போர்டுகள் சாலைகளை மறைக்கும் விதமாக நிறுவனங்கள் வைத்து விடுகின்றன. விளம்பர பலகை வைப்பதற்கு முன் போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அந்த விதிமுறையும் பின்பற்றப்படுவது கிடையாது. பெரிய வர்த்தக நிறுவனங்கள் உயர் அதிகாரிகளை வளைத்து இஷ்டம் போல் விளம்பர பலகைகளை வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலான விளம்பர போர்டுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நகரில் நினைத்த இடங்களில் எவ்வித அனுமதியின்றி பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்படுகின்றன. பலவித கலர்களில் வைக்கப்படும் இந்த போர்டுகளை பார்த்துக்கொண்டு பலர் வாகனங்களை இயக்குவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த பிளக்ஸ் போர்டுகளை வரைமுறைபடுத்தி தேவையான விசேஷங்களுக்கு மட்டும் அனுமதியுடன் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment