(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 9, 2018

ராமநாதபுரத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற ம.ஜ.க வைச்சேர்ந்த 13 பேர் கைது!!

No comments :
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ரயில் மறியல் செய்ய முயன்றதாக மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த 13 பேரை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயினுலாவுதீன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 13 பேர் ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பாக மதுரையிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலை மறிக்க முயற்சி மேற்கொண்டனர்.



தகவலறிந்து ராமநாதபுரம் டி.எஸ்.பி.எஸ்.நடராஜ் தலைமையிலான போலீஸார் அவர்களை ரயில் நிலையம் முன்பாகவே வழிமறித்து 13 பேரையும் கைது செய்தனர்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டே ஊர்வலமாக வந்த போது போலீஸார் கைது செய்தனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment