(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 19, 2018

ராமேஸ்வரத்தில் 238 மதுபாட்டில்கள் பறிமுதல்; 5 பேர் கைது!!

No comments :
ராமேஸ்வரத்தில் கள்ளத்தனமாக விற்க கொண்டு வந்த 238 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைதாயினர்.

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாம்பனில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு தடை உள்ளது. ஆனால் பலர் பாம்பனில் இருந்து மதுபாட்டில்களை கள்ளத்தனமாக மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு ராமேஸ்வரம் பகுதியில் விற்று வருகின்றனர்.

குடியிருப்பு பகுதிகள், ராமநாதசுவாமி கோயில், ரயில்வே ஸ்டேஷன், கடற்கரை, துறைமுகம், பேருந்து நிலையம் என அனைத்து பகுதியிலும் குடிசைத்தொழில் போல் வீடுகள், கடைகளுக்குள் வைத்து மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது.


செல்போனில் தொடர்பு கொண்டால் உடன் இருக்கும் இடத்திற்கு தேடி வந்து, மதுபாட்டில்களை சப்ளை செய்யும் மொபைல் விற்பனையிலும்பலர் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டிலுக்கு ரூ.25 முதல் ரூ.100 வரை கூடுதல் விலை வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாம்பனில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி கடத்தி வந்த 3 பேரை பிடித்தனர். இதுபோல் ராமேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயில் சாலை பகுதியில் மது விற்பனை செய்த இருவரை பிடித்தனர்.

பிடிபட்ட களஞ்சியம்(36), நம்புவேல்(35), அலெக்ஸ்(25), பாலமுருகன் மற்றும் செல்லமுத்து ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்த 238 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment