(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 20, 2018

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியுடைய பெண்கள் வியாழக்கிழமைக்குள் (ஜூன் 21) விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் தமிழகத்தில் வீரதீரச் செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிந்த பெண்களுக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இதன்படி 2018 ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. 



இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது சுய விவர அறிக்கை, புகைப்படம், பத்திரிகை செய்திகள், சான்றிதழ்கள் மற்றும் வீரதீர சாதனைகள் பற்றிய விவரங்களை மூன்று ஸ்பைரல் பைண்டிங் நகல்களாக தயார் செய்து,

சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம்,
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், ராமநாதபுரம்

என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ வரும் 21 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


மேலும், விவரங்களுக்கு 04567-230238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment