(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 9, 2018

ராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (அக். 10) தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக, ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், நீட்ஸ் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், வங்கிகளின் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் குறித்து விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெறுகிறது.


இக்கருத்தரங்கினை, ராமநாதபுரம் மாவட்டத் தொழில் மையமும், கதர் கிராமத் தொழில்கள் ஆணையமும் இணைந்து நடத்துகின்றன. இதில், தொழிலில் வெற்றி அடைந்த சாதனையாளர்கள், வங்கி மேலாளர்கள், சிறுதொழில் சங்கத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.


எனவே, தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இங்கு வந்து தகுந்த ஆலோசனைகள் பெறலாம் என, அதில் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment