(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 9, 2018

ரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது!!

No comments :
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை திங்கள்கிழமை உடைத்து திருட முயன்றவரை, ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இரவு நேரப் பாதுகாப்பு பணிக்கு பாதுகாவலர்கள் இல்லை.



இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் ஏ.டி.எம். மையத்திலிருந்து சத்தம் கேட்டுள்ளது. உடனே, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஏ.டி.எம். மையத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஒருவர் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணப் பெட்டகத்தை திறந்துள்ளார். அதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர்கள் ஏ.டி.எம். மையத்தை பூட்டிவிட்டு, ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ரயில்வே போலீஸார், அந்த நபரைப் பிடித்தனர்.

மன நோயாளி போல் அந்த நபர் நடந்துகொண்டாலும், திருட்டில் ஈடுபடுவதற்கு முன் கண்காணிப்பு கேமரா மற்றும் இணைப்பு வயர்களை துண்டித்திருப்பது தெரியவந்தது. அந்த மர்ம நபரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment