(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 3, 2020

முகநூல் மூலம் அவதூறு பரப்பியதாக 7 பேர் மீது வழக்கு!!

No comments :
முன்விரோதத்தில் போலி முகநூல் மூலம் அவதூறு பரப்பியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் வாணி கரிக்கூட்டம் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் நூர்முகம்மது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமபக்தன் எனும் பெயரில் போலி முகநூலை ஆரம்பித்த சிலர் அதில் நூர்முகம்மது குறித்து அவதூறு பரப்பியதாகப் புகார் எழுந்தது.



இதுகுறித்து நூர்முகம்மது அளித்தப் புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணை அடிப்படையில் போலி முகநூல் மூலம் நூர்முகமது மீது அவதூறு பரப்பியதாக அதே பகுதியைச் சேர்ந்த அஜ்மல்கான் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment