(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 18, 2020

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் பள்ளிகளில் சேர்க்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களை மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. பிளஸ் 1 வகுப்புகளுக்கு வரும் 24 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. 


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சேரும் மாணவ, மாணவிகளை மாற்றுச்சான்று இல்லாவிட்டாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சேர்க்கை முடிந்த ஒருவாரத்தில் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழை பெற வேண்டும் என மாவட்ட கல்வித் துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதே நேரத்தில் 9 ஆம் வகுப்பில் சேருவோருக்கு மாற்றுச் சான்றிதழை அவசியம் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment