(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 20, 2015

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு!!

No comments :
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள புரொ பேஷனரி அதிகாரி காலியிடங்களைப் பொது எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு : 01.04.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.



தேர்ச்சி முறை:
முதல் கட்டத்தில் 100 மதிப்பெண்களுக்கான ஆன்-லைன் முறையிலான அப்ஜெக்டிவ் வகை பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்ட பொது எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் வகையிலும், 50 மதிப்பெண்களுக்கு டெஸ்கிரிப்டிவ் வகையிலும் நடத்தப்படும். இதன் பின்னர் நேர்காணல் மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையங்கள்:
தமிழ் நாட்டில் சென்னை கோவை, சென்னை, மதுரை ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் இத்தேர்வை எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம்: எஸ்.பி.ஐயின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 600/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சார்ந்தவர்கள் ரூபாய் 100/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை ஆன் லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையான தகவல்களை இணையதளத்தில் பார்த்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
02.05.2015 விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.sbi.co.in


No comments :

Post a Comment