(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 6, 2015

பெங்களூருவில் குழந்தைகளுக்கு “நோ” ஃபேஸ்புக்”!!

No comments :
பெங்களூருவில் உள்ள சர்வதேச பள்ளிகளில், சேரும் குழந்தைகள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு இருக்கக்கூடாது என நிபந்தனை 
விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு துவக்க மாட்டார்கள் என பெற்றோரிடம் நிபந்தனை விதிக்கப்பட்டு அது தொடர்பான ஆவணங்களிலும் கையெழுத்து வாங்கப்படுகிறது.




இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவே இது போன்று நிபந்தனை விதிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகங்கள் கூறியுள்ளன. 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பேஸ்புக்கில் இணையக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மற்ற குழந்தைகள், ஆசிரியர்களுடன் நண்பர்களாக இணையக்கூடாது எனவும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

No comments :

Post a Comment