(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 29, 2015

ராமநாதபுரம் அருகே வீடுபுகுந்து பெண்களை துன்புறுத்துவதாக புகார் கூறி, வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து பழங்குடியின மக்கள் போராட்டம்!!

No comments :
ராமநாதபுரம் அருகே வீடுபுகுந்து பெண்களை துன்புறுத்துவதாக புகார் கூறி, வனத்துறை அதிகாரிகளை பழங்குடியின மக்கள் புதன்கிழமை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் அருகே காட்டூரணி பகுதி எம்.ஜி.ஆர்.நகரில் நரிக்குறவர் இன பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் முயல் மற்றும் கதுவாலிப்பறவைகளை வேட்டையாடி வந்ததாகக் கூறி வனத்துறை அதிகாரிகள் புதன்கிழமை இவர்களது வீடுகளில் புகுந்து சோதனை செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த பாத்திரங்களையும் சமையல் பொருள்களையும் பறிமுதல் செய்து அவற்றை ஜீப்பில் ஏற்றியுள்ளனர்.
 இதனால் ஆத்திரமுற்ற பழங்குடியின மக்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வனக்காப்பாளர் எஸ்.பாஸ்கரன், வனவர் மதியழகன், ஜீப் ஒட்டுநர் சரவணன் உள்ளிட்டோரை சிறை பிடித்துக் கொண்டனர். மேலும் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் துரை.விவேகானந்தன், சார்பு ஆய்வாளர்கள் கணேசலிங்க பாண்டியன், முத்துராமலிங்கம் மற்றும் பேராவூர் ஊராட்சி மன்றத் தலைவர் கோட்டைச்சாமி உள்ளிட்டோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, பழங்குடியின இளைஞர்களான துரை மற்றும் பொன்னையா ஆகிய இருவரும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து சமாதானப்படுத்தினர்.


வன அதிகாரிகள் அடிக்கடி லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும் சோதனை என்ற பெயரில் வீடுபுகுந்து பெண்களை துன்புறுத்துவதாகவும் அவர்கள் புகார் கூறினர். பேச்சுவார்த்தைக்குப்பிறகு வன அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். மறியல் கைவிடப்பட்டது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment