(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 15, 2016

ராமநாதபுரத்தில் வீடு புகுந்து திருட முயன்ற பள்ளி மாணவர் கைது!!

No comments :
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து திருட முயன்ற பள்ளி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் மனைவி தனலெட்சுமி(40). இவர், சனிக்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, மாடக்கொட்டான் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் 15 வயது மகன், வீட்டின் சுவர் ஏறிக் குதித்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபெட்டை திருடி வெளியே வைத்துவிட்டு, மறுபடியும் வீட்டுக்குள் சென்று பொருள்களை திருட முயன்றுள்ளார்.

இந்நிலையில், குளித்துவிட்டு வெளியே வந்த தனலெட்சுமி வீட்டுக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்து உள்ளே வந்து பார்த்தபோது, சிறுவன் தப்பி ஓடுவது தெரியவந்தது.



இது குறித்து, தனலெட்சுமி ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், காவல் சார்பு-ஆய்வாளர் இருளப்பன் வழக்குப் பதிந்து விசாரித்தார். பின்னர், மாடக்கொட்டான் பகுதியைச் சேர்ந்த சிறுவனை கைது செய்து, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான். இச்சிறுவன் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment